திருநெல்வேலியில் பயங்கரம் - கல்லூரி வளாகத்தில் வாலிபர் வெட்டிக் கொலை.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மேல திடியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த சில மாதங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சில தொழிலாளர்கள் கல்லூரி வளாகத்திலேயே தங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களில், கன்னியாகுமரி மாவட்டம் சுனைப்பாறை பகுதியைச் சேர்ந்த ஜூலியஸ் குமார் என்பவர் அதே கல்லூரி வளாகத்தில் தங்கி கான்கிரீட் கம்பி கட்டும் பணிக்கு மேஸ்திரியாக பணி புரிந்து வருகிறார். இவருடன் ஏழு பேர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் ஒன்று சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, ஜூலியஸ் குமாருக்கும் அங்கிருந்த சிலருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அது சிறிது நேரத்தில், கைகலப்பாக மாறியுள்ளது. 

இதைப்பார்த்த மற்ற நபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதனபடுத்தி தூங்க சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது ஜூலியஸ் குமார் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற நபர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் கட்டுமான பணிக்காக வந்த நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man murder in tirunelveli college campous


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->