மர்மமுறையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர் - கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


மர்மமுறையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர் - கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் திருமேற்றலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ராமலிங்கத்தின் மனைவி மற்றும் மூன்று மகள்கள் கடந்த புதன்கிழமை வெளியில் சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ராமலிங்கம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுத்துள்ளனர். 

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் இதனை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து ராமலிங்கம் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died in locked house police enquiry


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->