புதுமணத் தம்பதி கொலை - பெண்ணின் தந்தை கைது.!
man arrested for new married couple murder in thoothukudi
தூத்துக்குடியில் முருகேசன் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான மாரிசெல்வம் என்பவர் தன்னுடன் படித்து வந்த கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்ததனால், இருவரும் கடந்த திங்கள்கிழமை கோவில்பட்டியில் திருமணம் செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கார்த்திகாவை மாரிசெல்வம் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதையறிந்த மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வந்து மாரிச்செல்வத்தின் வீட்டிற்குள் புகுந்து காதல் தம்பதியினர் இருவரையும் சரமாரியாக வெட்டி, கொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றனர்.
திருமணமான மூன்று நாட்களில் புதுமணத் தம்பதியினர் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்,

பின்னர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பலை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் புதுமணத் தம்பதி கொலை வழக்கில் பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தந்தை முத்துராமலிங்கத்தை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய உறவினர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
man arrested for new married couple murder in thoothukudi