#தூத்துக்குடி || மனைவி தன்னுடன் வாழ வராததால் மாமனாரை கொலை செய்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் மனைவி தன்னுடன் வாழ வராததால் மாமனாரை கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வாகைத்தாகூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தானக்குமார். இவரது மனைவி ஜெயா. சந்தனகுமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் ஜெயா தனது இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் சந்தனக்குமார், மனைவி ஜெயாவை தன்னுடன் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று மாமனாரிடம் கேட்டுள்ளார். இதற்கு மாமனார் மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தனகுமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்ததில், தலைமறைவாக இருந்த சந்தனக்குமாரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for killing father in law in Thoothukudi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->