தாயுடன் தகாத உறவு இருந்ததால் ஆத்திரத்தில் நண்பனை கொலை செய்த வாலிபர் கைது.!! - Seithipunal
Seithipunal


தாயுடன் தகாத உறவு இருந்ததால் ஆத்திரத்தில் நண்பனை கொலை செய்த வாலிபர் கைது.!!

சென்னையில் உள்ள போரூர் பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல், முருகன், கார்த்திக். இவர்கள் மூன்று பேரும் சாலையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், காகிதம், அட்டை, இரும்பு உள்ளிட்ட பொருட்களை சேகரித்து அதனை விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து சாலையோரம் தங்கி வாழ்ந்து வருகின்றனர். 

இவர்களில் கார்த்திக் தனது தாயார் ஜமுனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், மூன்று பேரும் நேற்று முன்தினம் வழக்கம் போல் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது வடிவேலுக்கு, கார்த்திக்கின் தாயார் ஜமுனாவுடன் தகாத உறவு உள்ளதாக முருகன் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த வடிவேல், முருகனுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியுள்ளது. இதில், முருகன் இரும்பு கம்பியால் வடிவேலுவை தாக்கியுள்ளார். பதிலுக்கு வடிவேலும் உருட்டுக் கட்டையால் முருகனின் தலையில் தாக்கியுள்ளார். இதனால், முருகன் பலத்த காயமடைந்து தரையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து மருத்துவமனை சார்பில் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி போலீஸார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for kill friend in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->