ராமநாதபுரம் : குடி போதையில் தகராறு - ஆத்திரத்தில் தந்தை கொலை.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் : குடி போதையில் தகராறு - ஆத்திரத்தில் தந்தை கொலை.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் அருகே அழகன்குளம் செட்டிப்பனை பகுதியைச் சேர்ந்த மீனவர் கார்மேகம். போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவி லட்சுமியுடன் பிரச்சனை செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் வழக்கம் போல் குடிபோதையில் வந்த கார்மேகம், அவரது மனைவி மற்றும் மகன் கோபால் உடன் பிரச்சனை செய்தார். அவரிடம் கோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கோபால் அருகில் கிடந்த கட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். இதில் கார்மேகம், பலத்தக் காயம் அடைந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கார்மேகத்தை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கோபால் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for kill father in ramanathapuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->