பூந்தோட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் வாலிபர் கைது.!!
man arrested for harassment in salem
சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி அருகே நாழிக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள பூந்தோட்டத்திற்கு சென்றார். அங்கு ஏழு வயது சிறுமி, தனது பெற்றோருடன் மல்லிகை பூக்கள் பறித்து கொண்டிருந்தார்.
அப்போது சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதால் ஜெயராமன் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி பெற்றோரிடம் அழுதுள்ளார்.

உடனே சிறுமியின் பெற்றோர் ஜெயராமனை பிடித்து கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் படி, போலீசார் ஜெயராமனிடம் விசாரணை நடத்தியதில், தோட்டத்தில் வைத்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
man arrested for harassment in salem