கார்த்திகை பிரதோஷம்: சதுரகிரியில் வழிபாட்டுக்கு குவிந்த பக்தர்கள்..!
Devotees throng Chathuragiri for Karthigai Pradosham worship
இன்று கார்த்திகை மாத தொடங்கியுள்ளது. கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி கோயிலில் வழிபாடு செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படும் இக்கோயிலில் வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இன்று கார்த்திகை மாதப் பிறப்பு மற்றும் பிரதோஷத்தையொட்டி விருதுநகர், ராஜபாளையம், மதுரை, சிவகாசி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவிந்தனர். இதனால், காலை 06 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது.
பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த வனத்துறையினர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், பாலித்தீன் பைகள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்குச் அனுப்பப்பட்டனர்.
English Summary
Devotees throng Chathuragiri for Karthigai Pradosham worship