மதுபோதையில் விபரீத சாகசம்.. இறுதியில் காத்திருந்த சோகம்.. காட்சிப்பொருளான கார்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் காரொன்று பாந்திரா நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த காரில் பயணம் செய்த இரண்டு வாலிபர்கள், காரின் ஜன்னலில் வெளிப்புறமாக அமர்ந்துகொண்டு மதுபானத்தை அருந்தியுள்ளனர். 

மதுபானத்தை அருந்திய இருவரும், விபரீத சாகசத்தில் ஈடுபட்டு வீடியோ காட்சியை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், மும்பை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், காரின் பதிவெண் கொண்டு விசாரணையை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். 

இந்த விசாரணையில், இருவரும் காந்திவிலி பகுதியை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வாலிபர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மூவரும் தற்போது சிறையில் உள்ள நிலையில், அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra Mumbai Youngster Drinks and drive car Makes adventure


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->