பெண்ணிடம் நகை பறிப்பு: ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற கொடூரம்! - Seithipunal
Seithipunal


மதுரை, வைகை நதி பகுதியைச் சேர்ந்தவர் திலக்குமார். இவரது மனைவி லதா (வயது 40) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 

இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் 2 பேர் லதாவின் அருகில் நெருங்கி திடீரென அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலியை இழுத்து பறித்தனர். 

இதனை சற்றும் எதிர்பாராத லதா தனது வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த நிலையிலும் அதனை பாராமல் மர்ம நபர்கள் லதாவை ரோட்டில் தரதரவென இழுத்தபடி தங்க சங்கிலியை அறுத்து தப்பிச் சென்றனர். 

நகையை பறிகொடுத்து படுகாயம் அடைந்த லதா உடனடியாக மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் மர்ம நபர்கள் லதாவை சாலையில் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுபோன்ற சம்பவங்கள் மதுரையில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai woman jewelry theft


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->