மதுரையில் இந்த 3 நாட்கள் மதுக்கடைகள் இயங்காது: ஆட்சியர் அதிரடி உத்தரவு!
Madurai three days liquor shops closure
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வருடம் தோறும் தை மாதம் நடைபெற்று வருகிறது. அது போல் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பெற்றதாக உள்ளது.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகின்ற 15, 16, 17 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாக குழுவினர் முறையாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 15, 16, 17 ஆம் தேதிகளில் மதுபான கடைகள் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
English Summary
Madurai three days liquor shops closure