மதுரை ,அதிமுக மாநாடு! உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு!
Madurai AIADMK meet Chennai HC Order to madurai SP
மதுரையில் வருகின்ற 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், தற்போது டிடிவி தினகரனுடன் கைகோர்த்து அரசியல் முன்னெடுப்பை எடுத்து வரும் நிலையில், அதிமுகவின் இந்த மதுரை மாநாடு முக்கிய திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கையும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் மதுரை மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, மாவட்ட எஸ்பிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
அதிமுக மாநாட்டுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் வழங்க உத்தரவிடக்கோரி, உதயகுமார் இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நாகர்ஜூன், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் போக்குவரத்து பாதிப்பு இல்லாத வகையில், மதுரையில் நடைபெறும் இந்த அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு வழங்குவதை மதுரை மாவட்ட எஸ்பி உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Madurai AIADMK meet Chennai HC Order to madurai SP