மன அழுத்தத்தில் இருந்து விடுபட மாந்திரீக பூஜை..பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் நாயை பலி கொடுத்தாரா?
To get rid of stress a ritual was performed Did a female computer engineer sacrifice a dog?
நாயை கழுத்தை அறுத்து கொன்றதுடன், உடலை துண்டு, துண்டாக வெட்டி ,மன அழுத்தத்தில் இருந்து விடுபட மாந்திரீக பூஜை செய்ததாக கூறப்படும் பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுராபகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த திரிபர்ணா பாயிக் பெண் வசித்து வருகிறார்.36 வயதான இந்த பெண் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து ,தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டில் 3 நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி சம்பவத்தன்று திரிபர்ணாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் திரிபர்ணாவின் வீட்டில் சோதனை நடத்தியபோது வளர்ப்பு நாயை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி சாக்குபையில் பொதிந்து ஒரு அறையில் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அந்த அறையில் சோதனை செய்ததில் சாமி படங்கள் மற்றும் பூஜை பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து மகாதேவபுரா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திரிபர்ணா, மாந்திரீகம் செய்ய நாயை கழுத்தை அறுத்து கொன்றதுடன், உடலை துண்டு, துண்டாக வெட்டியது தெரியவந்தது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மாந்திரீக பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
To get rid of stress a ritual was performed Did a female computer engineer sacrifice a dog?