காலை பத்து மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா?
Do you know which districts are likely to receive rain until ten morning
சென்னை வானிலை ஆய்வு மையம், 'தமிழகத்தில் இன்று (28-06-2025), மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில்,தென்காசி,திருநெல்வேலி,கன்னியாகுமரி,தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆகையால் மக்கள் பணிக்கு செல்பவர்கள் நேரம் அறிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary
Do you know which districts are likely to receive rain until ten morning