கோவை தொகுதி ரிசல்டுக்கு தடையா.? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முழுவதும் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் கோவை தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

அவரின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைய கிளப்பிய நிலையில் ஆஸ்திரேலியாலில் மருத்துவராக பணியாற்றும் சுந்தர கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அவர் தனது மனுவில் கோவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவின் படை இந்திய தேர்தல் ஆணையம் பதில் தாக்கல் செய்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் "கோவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? 

தற்போது வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை ஆக காத்திருக்கும் நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது" எனக்கு ஊறி கோவை தொகுதி தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madrashc refused Coimbatore election case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->