முன்னாள் எம்.பி ஜெயப்பிரதா சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
MadrasHC orders former MP Jayaprada to surrender
பிரபல நடிகையும் முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா சென்னையை சேர்ந்த ராம்குமார், ராஜ் பாபு ஆகியோருடன் இணைந்து அண்ணா சாலை அருகே ஜெயப்பிரதா என்ற திரையரங்கு நடத்தி வருகிறார். அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் வசூலித்த வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்தாது தொடர்பான வழக்கில் ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 மாத சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா உள்ளிட்ட மூன்று பேர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு மன்றம் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்தது. சென்னை முதன்மை அமர்வு மன்றம் தீர்ப்பு நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும் முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா உள்ளிட்ட மூன்று பேர் 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து 20 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் டெபாசிட் தொகையான 20 லட்ச ரூபாய் செலுத்திய பிறகு ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
MadrasHC orders former MP Jayaprada to surrender