அகவிலைப்படி வழக்கில் குடிநீர் வாரியத்தை ரவுண்டு கட்டிய நீதிமன்ற.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு குடிநீர் வாரியம் ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை வழங்கிவிட்டு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க மறுப்பது பாரபட்சம் என தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிவால் வாரியம் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. உண்மையிலேயே நிதி நெருக்கடி இருந்தால் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கொடுத்திருக்கக் கூடாது. 

கடந்த 2022 ஜனவரி முதல் கணக்கிட்டு ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை 4 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் சார்பில் அகவிலைப்படியை ஊழியர்கள் போன்ற தங்களுக்கும் உயர்த்தி வழங்க உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MadrasHC order drinking water board subsidized rates case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->