தமிழகத்தில் 4 மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது வரை 269 பேருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா விட வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம்  தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக சென்னை - 26, மதுரை - 4, திருவண்ணாமலை - 2, சேலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12 நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 

18,129 பேரில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 57 பேரில் 34 பேர் முடிவு தெரியவந்துள்ளது. 23 பேருக்கு மாதிரிகள் இன்னும் வர வேண்டியுள்ளது. 33 பேரில் இரண்டு பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற 31 பேரும் 2 தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ma subramanian press meet about omicron positive


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->