வேறொரு பெண்ணுடன் பேசிய காதலன்.. தட்டிகேட்டதால் நடந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


காதலியை கொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், நொச்சி பெட்டிகள் தனியார் கோழி பண்ணை உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மூலம் சோமனுபோயான் (17) அவரது காதலி போதிமாண்டேல் (16) ஆகியோர் வேலை கேட்டு வந்தனர்.

அவர்களுக்கு 18 வயது நிரம்பாத தான் அவர்களை வேலையில் அமர்த்த வில்லை என கூறப்படுகிறது. இதில் அங்கு வசித்து வரும் தனது நண்பர்களுடன் அவர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சோமுவின் தனது செல்போனில் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அவரது காதலி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே சோமனு துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lover killed his girl friend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->