இன்று ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: தோல்வி பயத்தில் மாணவி விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக நிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை கொட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்தவர் புண்ணிய மூர்த்தி. இவரது மகள் ஆர்த்திகா. பாபநாசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த ஆர்த்திகா சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதினார். 

இந்நிலையில்,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. இந்த தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் இருந்த ஆர்த்திகா, வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் செய்து தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். இதனால் ஆர்த்திகாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Plus 2 public exam results today Student commits suicide over fear of failing the exam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->