ஊராட்சி தலைவர் கொலை வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஊராட்சி தலைவர் கொலை வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

மதுரை மாவட்டத்தில் உள்ள கார்சேரி பகுதியில் ஊராட்சி தலைவராக இருந்தவர் கருப்புசாமி. அதிமுக கிளை செயலாளராகவும் இருந்து வந்த இவர் கடந்த 2015ம் ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் முன்னாள் ஊராட்சி தலைவர் முனியசாமி, தமிழ்செல்வம் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

தற்போது, இந்த வழக்குத் தொடர்பான அணைத்து விசாரணையும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதாவது, ஊராட்சி ஒன்றிய தலைவர் கொலை வழக்கில் தமிழ்செல்வம், சவுந்தரபாண்டி, பிரபுதேவா, இளவரசன், கவியரசன், அஜித், வெண்ணிலா, முனியசாமி உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ரூ.48 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து போலீசார் 8 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

life penalty to eight prisons for village president murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->