நில தகராறு.. கூலி படையை ஏவிவிட்ட மில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!
Land dispute Lawsuit filed against the mill owner who abandoned the laborers
நில தகராறு பிரச்சனையில் தொழிலாளியை கூலிப்படையை ஏவி விட்டு தாக்கிய தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் ACV மில் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் குடியிருந்து வருபவர் கிருஷ்ணசாமி மகன் சிவாஜி,இவருக்கு லட்சுமிபுரம் பகுதியில் புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகில் ACVமில் உரிமையாளர் குமார் என்பவருக்கும் நிலம் இருப்பதாக தெரிகிறது, இந்த நிலம் தொடர்பாக சிவாஜிக்கும்ACV குமார் என்பவர்க்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுவந்ததாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவித்த நிலையில் கடந்த 5-6 - 2025 ஆம் தேதி காலை 6 மணி அளவில் சிவாஜி தனது இருசக்கர வாகனத்தில் திருப்பதி தோட்டம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது,
திடீரென்று இரு சக்கர வாகனத்தில் வந்த ACVகுமார்-ன் ஆதரவாளரான சுந்தர்ராஜன் சுந்தர்ராஜன் மகன் நவீன் சுந்தர்ராஜனின் இரண்டாவது மகன் மற்றும் வடபுதுப்பட்டியைச் சேர்ந்த சிவமுருகன் மற்றும் அடையாளம் தெரிந்து விலாசம் தெரியாத மூன்று நபர்கள் உட்பட அனைவரும்ஒன்றாக சேர்ந்து Acv குமாரிடம் பிரச்சனைகளை செய்யக்கூடாது என்று சொல்லிக்கொண்டே சிவமுருகன்-நவீன் ஆகியோர் சிவாஜியின் மீது மிளகாய்பொடியை கண்ணில் தூவிவிட்டுஇ இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கப்பட்டார்.
படுகாயம் அடைந்த சிவாஜியை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்
இந்த சம்பவம் தொடர்பாக தென்கரை காவல்துறை வழக்குபதிவு செய்து குற்றவாளிகளைை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்று சொல்லப்படும் ACV மில் உரிமையாளர் குமார் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்- குண்டர்கள் தாக்குதலில் சிவாஜிக்கு உடலில் இரத்த காயம் ஏற்பட்டதுடன் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த பயங்கர சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
English Summary
Land dispute Lawsuit filed against the mill owner who abandoned the laborers