மதுவால் பிரச்சனை.! கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் மதுவால் ஏற்பட்ட பிரச்சனையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜ்மிர்(32). இவர் தனது குடும்பத்தினருடன் கம்பத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் அஜ்மிர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதால், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று அஜ்மிர் வீட்டிலேயே மது குடித்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்பு திரும்பி வந்து பார்த்த போது கதவு பூட்டி இருந்துள்ளது.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அஜ்மிர் தூக்கில் தொங்கி கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரது மனைவி அஜ்மிரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வழியிலேயே அஜ்மிர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கம்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer suicide in theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->