'குறவன் - குறத்தி' ஆட்டம் அனுமதிக்கக் கூடாது - உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கோவில் மற்றும் ஊர் திருவிழாக்களில் 'ஆடல், பாடல்' என்ற பெயரில் குறவன்- குறத்தி ஆட்டம் என்ற ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கக் கூடாது என்று, தமிழக போலீசாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

முத்துமுருகன் என்ற நபர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கோவில் மற்றும் ஊர் திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன் - குறத்தி ஆபாச ஆட்டம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

கடந்த 30 வருடங்களுக்கு முன்பெல்லாம், புராண, நீதிக் கதைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது குறவன்- குறத்தி ஆட்டம் என்ற பெயரில், மிக மோசமான இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட ஆபாச நடனங்கள் நடக்கிறது. 

எனவே, இந்த குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்தும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இதுபோன்ற ஆட்ட காணொளிகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதிகள், "குறவன் - குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. இதனை தடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்புவது குறித்து டிஜிபி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ஆகியோரிடம் விளக்கம் பெற்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், குறவன் - குறத்தி என்று ஒரு சமூகத்தின் பெயரால் இந்த நிகழ்ச்சி நடப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், எந்த சமூகத்தினரும், யாராலும் அவமதிக்கப்படக் கூடாது என்று அறிவுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kuravan Kurathi dance issue hc order


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->