வட மாநில பாணியில் கும்மிடிப்பூண்டி மனைவியை கொண்டு ட்ரம்மில் புதைத்த கணவன்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் துராப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், பெயிண்டர். அவரது மனைவி பிரியா (26). இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். பிரியாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிரியா அடிக்கடி தனது பெற்றோர் வீடான புதுப்பாளையத்திற்கு சென்று, பின்னர் சமாதானமாகி மீண்டும் குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்துவந்தார்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக பிரியா பெற்றோருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தார். இதனால் கவலைப்பட்ட தந்தை சீனிவாசன் சமீபத்தில் மகளைப் பார்க்க சிலம்பரசனின் வீட்டிற்கு வந்தார். அப்போது பிரியா காணாமல் போனதை அறிந்து சந்தேகம் அடைந்தார். பேரன்களும் தாய் வீட்டில் இல்லையென்று கூறியதால் அவர் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சிலம்பரசனை தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் கடந்த ஆகஸ்ட் 14 இரவு ஏற்பட்ட தகராறில் பிரியாவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், உடலை டிரம்மில் அடைத்து மோட்டார் சைக்கிளில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏழுகண் பாலம் அருகே உள்ள சுடுகாட்டில் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சிலம்பரசன் கைது செய்யப்பட்டார். அவர் ஒருவரால் உடலை புதைப்பது சாத்தியமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் அவருக்கு உதவியவர் யாராவது உள்ளார்களா என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

பிரியாவின் உடல் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் இன்று கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் முன்னிலையில் போலீசார் தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kummudipoondi woman murder case


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->