பூட்டிய வீட்டிற்குள் உடல் கருகி உயிரிழந்த தாய்-மகன்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம் (வயது 85). இவரது மகன் அன்பழகன் (வயது 67). கூலித்தொழில் செய்து வந்தார். 

இவரது மனைவி சாந்தி. கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

உடல்நிலை சரியில்லாத தாய் உடன் அன்பழகன் தனியாக வாசித்து வந்த நிலையில் நேற்று இரவு இருவரும் வீட்டை உள்பக்கம் பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். 

அப்போது அன்பழகன் வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றத்துடன் புகை வீசியதால் அந்த வழியாக சென்றவர்கள் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் அன்பழகன் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது தாய்-மகன் இருவரும் தீயில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உடல்நிலை சரியில்லாமல் கிடக்கும் தாயையும் தன்னையும் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் மன வேதனை அடைந்து அன்பழகன் தனது உடலிலும் தாய் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krishnagiri mother son commit suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->