வரதட்சணை கேட்டு பெண் கொலை?.. அரங்கேறும் நாடகம்?.. பெண்ணின் பெற்றோர்கள் கொந்தளிப்பு.!
Krishnagiri girl Mystery Death due to Dowry Problem Police Investigation
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சாதிநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவரது மகள் பவித்ரா (வயது 22). கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் பகுதியை சார்ந்த பொறியாளர் பிரகாஷ் குமார் (வயது 28). இவர்கள் இருவருக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
பிரகாஷ் குமார் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலயில், கணவன் - மனைவியும் வாங்கல் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். திருமணத்தின் போது மணமகள் வீட்டு சார்பாக மணமகனுக்கு 40 பவுன் நகைகள் மற்றும் பிற சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், பிரகாஷின் உறவினர்கள் தரப்பில் கூடுதல் நகை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரியவருகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல பணிக்கு பிரகாஷ் சென்றுவிட்ட நிலையில், மாலையில் வீடு திரும்பும் போது பவித்ரா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்ட பிரகாஷ் குமார், மருத்துவமனைக்கு மனைவியை கொண்டு செல்கையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பவித்ராவின் பெற்றோருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு வந்த பவித்ராவின் உறவினர்கள் மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் பவித்ராவின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri girl Mystery Death due to Dowry Problem Police Investigation