கொடநாடு கொலை வழக்கு விசாரணை; நீதிமன்றம் போட்ட உத்தரவு..?
Kodanadu murder case trial postponed
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டம், ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்றுநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகிஇருந்தனர்.
ஆனால், குற்றவாளிகள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து விசாரணையின் போது மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். அதனை தொடர்ந்து குறித்த வழக்கு மீதான விசாரணையை வருகிற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Kodanadu murder case trial postponed