கரூர் & நாமக்கல் மாவட்ட மக்களே உஷார்.. நாட்டுக்கோழி முட்டை என்ற பெயரில், காபித்தூள் சாய முட்டை.! - Seithipunal
Seithipunal


பிராய்லர் கோழி முட்டை மீது காப்பித்தூள் சாயம் பூசி நாட்டுக்கோழி முட்டை என்று கூறி விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முட்டைகளை வாங்கி, அவற்றை காபி தூள் கலந்த நீரில் ஊறவைத்து கரூரில் நாட்டுக்கோழி முட்டை என்று கூறி கும்பல் ஒன்று விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மக்களிடத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று காலையில் காபித்தூளில் ஊற வைத்த முட்டைகளை மூதாட்டி ஒருவர் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த முட்டைகளை வாங்கிய சமூக ஆர்வலர்களான இரண்டு பேர், அதனை உடைத்து பார்க்கையில் அது காபி தூளில் ஊறவைக்கப்பட்ட முட்டை என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து முட்டையை பிராய்லர் கோழி முட்டை என்பதை உறுதி செய்த இருவரும், கரூர் நகர காவல் துறையினருக்கும், உணவு கட்டுப்பாடு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் முன்னிலையிலேயே முட்டையின் போலித்தன்மையை போட்டுடைத்து விளக்கிய நிலையில், மூதாட்டியை கைது செய்த அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இதற்கு பின்னணியில் பெரிய கும்பல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur and Namakkal district Fake egg sales


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->