தவறான பாதையில் வந்த அரசு பேருந்து - பின் சக்கரத்தில் சிக்கி பலியான முன்னாள் ஊராட்சி தலைவர்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் தமிழக அரசு பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம், சாலை தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், தனது வீட்டில் இருந்து இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரின் மகளிர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காஞ்சிபுரம் காமராஜர் சாலை வழியாக இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, பன்னீர்செல்வத்தின் இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பன்னீர்செல்வம், பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடைத்திலயே பலியானார்.

இருசக்கர வாகனம், கார்கள் மட்டுமே செல்லக்கூடிய சாலையில், தமிழக அரசு பேருந்து வந்ததால் இந்த விபத்து நேரிட்டடு, ஒரு உயிர் பலியாக்கியதாக அந்த பகுதி வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanjipuram Bus Accident Old man death


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->