பாகிஸ்தான் எங்களுடைய நட்பு நாடு கிடையாது..முத்தகி பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானை தவிர அனைத்து அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று  தலீபான் அரசில் வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலீபான் அரசில் வெளியுறவு மந்திரியாக உள்ள அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் வந்துள்ளார் . அவர் இங்கு , மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் டெல்லியில் முத்தகி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியபோது , இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு நாங்கள் எந்தவித இடமும் அளிக்கவில்லை என்று கூறினார். 

இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, நாங்கள் யாரிடமும் மோதல் போக்கை விரும்பவில்லை.. பாகிஸ்தான் மட்டுமே எங்களுடைய நட்பு நாடு கிடையாது. எங்களுக்கு வேறு 5 அண்டை நாடுகளும்  எங்களுடன் மகிழ்ச்சியாக உள்ளனர் என கூறினார்.

மேலும் மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசினேன். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பிற விவகாரங்கள் பற்றியும் பேசினேன் என்றும் கூறினார்.

பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை என்றால், எங்களுக்கு வேறு சில வாய்ப்புகளும் உள்ளன என்றார். எஆப்கானிஸ்தானின் 19 நிலைகளை பாகிஸ்தான் கைப்பற்றி உள்ளது. இந்தியாவுடனான எங்களுடைய வர்த்தகம் 100 கோடி அமெரிக்க டாலரை (ரூ.8,865 கோடி) மிஞ்சியுள்ளது என்றும் அவர் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan is not our friendly country Muthagi sensational talk


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->