கல்லணை கால்வாயில் மிதந்த பெண், சிறுமி சடலம்! கொலையா? தற்கொலையா? - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர், அருகே உள்ள கல்லணை கால்வாயில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் மிதந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் 2 உடல்களையும் மீட்டு உடனடியாக தஞ்சாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இட து விரைந்து சென்று பார்வையிட்ட போது பெண்ணின் இடுப்பில் அந்த சிறுமி துப்பட்டாவால் கட்டப்பட்டது தெரிய வந்தது. 

பின்னர் இவர்கள் யார் தாய் மகளா எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என எதுவும் தெரியவில்லை. இதனை அடுத்து போலீசார் 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாராவது கொலை செய்து இங்கு வீசினார்களா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kallanai Canal dead bodys floated 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->