புதுக்கோட்டை || மைதானத்தில் மயங்கி விழுந்த கபடி வீரர் - நொடியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில், மேட்டுபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ் - தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு யோகேஸ்வரன், சிவா உள்ளிட்ட இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் யோகேஸ்வரன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கபடி வீரரான இவர், அன்னவாசல் அருகே மாங்குடியில் கபடி போட்டியில் யோகேஸ்வரன் கலந்து கொண்டு விளையாடினார். இந்த போட்டியில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது, யோகேஸ்வரன் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், அவரை மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் மூஸ்க்கடித்தது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kabbadi player died at play ground in putukottai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->