தமிழகத்தில் வரும் ஜூலை 21ம் தேதி குறிப்பிட்ட மாவட்டத்திற்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வரும் ஜூலை 21ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள், முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்கள், கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வரும் ஜூலை 21 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு முழு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் ஆடிப்பூரம் விழா வரும் ஜூலை 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

July 21 Local holiday to chengalpattu district


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->