ஜல்லிக்கட்டு போட்டிகளில் நேரம் குறைப்பு.? அதிகாரிகள் அளித்த விளக்கம்.! - Seithipunal
Seithipunal


பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம் போல் நடைபெறும் நேரங்களிலேயே நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரத்தில் எதுவும் மாற்றப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளனர். மேலும், எப்போதும் போல காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jallikattu competition timings


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->