#ஈரோடு: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு சிறை தண்டனை - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அக்பர் (55). இவர் கடந்த வருடம் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சைல்ட் லைன் அமைப்பினர், இது குறித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இது குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அக்பரை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அக்பருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jail sentence for worker who sexual harassment of 7 year old girl in erode


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->