திடீர் திருப்பம்.. கதவை உடைத்து உள்ளே புகுந்த ஐ.டி அதிகாரிகள்..!! யாருடைய அலுவலகம் பாருங்க.!!
IT officers broke the door of the govt contractor office in Karur
கரூர் மாவட்டத்தில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனையானது இன்றோடு 4வது நாளை எட்டியுள்ளது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக முழுவதும் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது கூடுதல் இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரராக எம்.சி சங்கர் ஆனந்த் என்பவரின் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அதே சாலையில் அமைந்துள்ள அவருடைய அலுவலகத்திலும் சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது அந்த அலுவலகம் பூட்டி இருந்ததால் அருகில் உள்ள கடைகளில் விசாரித்தனர். அப்போது வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு உரிய தகவல் கிடைக்காததால் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு 10 நிமிடம் காத்திருந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் ஆய்வாளர் சந்துரு முன்னிலையில் பூட்டி மூன்று அறைகளை வருமானவரித்துறை அதிகாரிகள் சுத்தியலை கொண்டு உடைத்து திறந்தனர். இதனைத் தொடர்ந்து மூன்று அறைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
சுமார் 5 கார்களில் வந்த 25க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சினிமா பாணியில் கதவை உடைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
IT officers broke the door of the govt contractor office in Karur