காலையிலே கோளாறு! ஐஆர்சிடிசி இணையதள தொழில்நுட்ப கோளாறு – பயணிகள் அவதி!
IRCTC website technical glitch passengers suffer
சென்னை: இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மற்றும் செயலியில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய விரைந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
இடர்பாடுகள் நேற்றுகாலை 10:15 மணி அளவில் திடீரென நிற்க காரணமாக, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தொழில்நுட்ப சிக்கலின் காரணமாக, இணையதளம் மட்டுமின்றி ஐஆர்சிடிசி செயலியும் முடங்கியது.
தற்போதைய நிலையில், இந்திய ரயில்வே முன்பதிவுகளில் 82% பயணிகள் இணையதளம் அல்லது செயலியை நம்பி டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இதில் தட்கல் முன்பதிவு மற்றும் அவசர டிக்கெட் தேவை கொண்ட பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மின்வழி முன்பதிவு செயல்படாத நிலையில், பல பயணிகள் முன்பதிவு மையங்களுக்கு சென்று நேரடியாக டிக்கெட்டுக்கு விண்ணப்பிக்க நேர்ந்தது. இதனால், மையங்களில் நீண்ட வரிசை மற்றும் கூட்டம் ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் தொடங்கி, நண்பகல் 12 மணிக்குப்பிறகு சேவைகள் முறையாக செயல்படத் தொடங்கின.
இது குறித்து ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறுகையில்,"திடீர் தொழில்நுட்ப கோளாறால் சேவையில் குறுகிய கால இடையூறு ஏற்பட்டது. தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நண்பகல் முழுமையாக சரிசெய்யப்பட்டது. இதுபோன்ற கோளாறுகளை தவிர்க்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்," என தெரிவித்தனர்.
இக்கோளாறு குறித்து பயணிகள் தெரிவித்துள்ளனர்:“இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப சிக்கல் ஏற்படுவது பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. ரயில்வே துறை இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்” என்றனர்.
தொடர்ந்து நடைமுறைகளில் மேம்பாடுகளை மேற்கொள்வது பயணிகள் எதிர்பார்க்கும் முதன்மை தீர்வாக உள்ளது.
English Summary
IRCTC website technical glitch passengers suffer