மனைவியின் தங்கையுடன் முறையற்ற உறவு.! குற்ற உணர்ச்சியால் கடைசியில் காத்திருந்த சோகம்..!! அரங்கேறிய விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் பகுதிக்கு அருகேயிருக்கும் குயிலாம்பாளையம் பகுதியை சார்ந்தவர் பன்னீர் (வயது 33). இவரது மனைவியின் பெயர் அருணா (வயது 28). இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

அருணாவின் தங்கையான சீதா தனது அக்காவின் வீட்டிலேயே வசித்து வந்த நிலையில்., சீதாவிற்கும் - பன்னீருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் தனிமையில் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும்., அங்குள்ள பல பகுதிகளுக்கு சென்று தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இந்த விஷயம் நாளடைவில் பன்னீரின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. மேலும்., இதுதொடர்பாக தனது தங்கையையும் - கணவரையும் கடுமையாக கண்டித்துள்ள நிலையில்., கடுமையான மன வேதனையுடன் பன்னீர் இருந்து வந்துள்ளார். தனது மனைவிக்கு துரோகம் செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியுடன் இருந்த அவர்., நேற்று வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வெளியே சென்றிருந்த மனைவி வீட்டிற்கு வந்து பார்க்கையில்., கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்ததை அடுத்து., இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவரமே தெரிய வந்தது. அந்த சமயத்தில்., பன்னீர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சீதாவிற்கும் தெரியவந்துள்ளதை அடுத்து., சீதாவும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இதையடுத்து சீதாவை மீட்ட உறவினர்கள்., அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பன்னீரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In villupuram man attempt suicide due to illegal affair with wife sister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->