"என் குடும்பத்தைக் கெடுத்தது அந்த மூன்று எழுத்து நடிகைதான்": நடிகர் ரவிமோகன் கண்ணீர் பேட்டி! - Seithipunal
Seithipunal


தனது தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் ரவிமோகன் (ஜெயம் ரவி) அவசரமாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தன் மீது சுமத்தப்படும் அவதூறுகளையும் அவமானங்களையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் கண்ணீர் விட்டுத் தமபமியே கதறி அழுதார்.

திருமண வாழ்க்கை மற்றும் பிளாக்மெயில் குற்றச்சாட்டுகள்:

செய்தியாளர் சந்திப்பில் தனது மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரவிமோகன் அடுக்கடுக்கான அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்:

கட்டாயத் திருமணம்: "ஆர்த்தி தனது கையை அறுத்துக்கொண்டு மிரட்டியதால் (பிளாக்மெயில்) மட்டுமே நான் அவரைத் திருமணம் செய்ய வேண்டியிருந்தது. திருமணத்திற்குப் பிறகும் என்னை ஒரு அடிமையைப் போலத்தான் நடத்தினார்கள்."

பொருளாதாரச் சுதந்திரமின்மை: "என் பெயரில் ஒரு சொந்த வங்கிக்கணக்கு கூட இல்லை. நான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைக் கூட என் விருப்பப்படி செலவு செய்ய எனக்குச் சுதந்திரம் இல்லை. இருப்பினும் ஆர்த்தியின் குடும்ப மருத்துவச் செலவிற்காக மாதம் ₹25,000 அனுப்பி வந்துள்ளேன்."

பிள்ளைகளுக்காகப் பொறுமை: "எனக்கு விருப்பமிருந்தால் ஒரே நாளில் விவாகரத்து செய்திருக்க முடியும். ஆனால், என் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இத்தனை காலம் அமைதி காத்தேன்."

தோழி கெனிஷா மற்றும் ஏஐ (AI) அவதூறுகள்:

தனக்குக் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்ட காலங்களில் தனக்குத் துணையாக நின்றவர் தனது தோழி கெனிஷா என்று குறிப்பிட்ட ரவிமோகன், "நான் அழகுக்காகப் பின்Bash செல்பவன் அல்ல. எனக்காக நின்ற என் தோழியைத் தேவையில்லாத வதந்திகள் மூலம் சென்னையை விட்டே விரட்டிவிட்டீர்கள்" என்று ஆதங்கப்பட்டார். மேலும், தனக்கு எதிராக ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பரப்புவதாகவும், இத்தகைய சைபர் துன்புறுத்தல்களால் (Cyberbullying) பலர் உயிரையே இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்று எழுத்து நடிகை மீது சாடல்:

பேட்டியின் இறுதியாக ஒரு முக்கியக் குண்டைத் தூக்கிப் போட்டார் ரவிமோகன். "என் குடும்ப வாழ்க்கையைக் கெடுத்ததே அந்த மூன்று எழுத்து 'இட்லி' நடிகை தான். பின்புலத்திலிருந்து அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு, வெளியே மட்டும் பெரிய பெண்ணியம் பேசுகிறார். இவர்களால் எப்படி இப்படி எல்லாம் நிஜ வாழ்க்கையில் நடிக்க முடிகிறது என்று எனக்குத் தெரியவில்லை" என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே பல கோடி கடன்களும் வழக்குகளும் தன் மீது இருக்கும் சூழலில், இந்த புதிய அவதூறுகள் தன்னை நிலைகுலைய வைத்துள்ளதாகக் கூறி அவர் பேட்டியை முடித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Three-Letter Actress Ruined My Family Actor Ravimohan Breaks Down in Press Meet


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->