திருடனை புலந்து கட்டிய பொதுமக்கள்.. கதறிய திருடன்... பதறிப்போன காவல்துறை.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதிகளில் அவ்வப்போது கொள்ளை சம்பவமானது தொடர்ந்து அரங்கேறி வந்து கொண்டு இருந்தது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கும் தொடர் புகார்கள் வந்துகொண்டிருந்த நிலையில்., காவல் துறையினரும் தங்களின் கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்தினர்.

இந்த நிலையில்., குடியாத்தம் பகுதியில் வசித்து வருபவரின் பெயர் சிவகுமார். இவர் இன்று காலை வீட்டில் தனியாக இருந்த நிலையில்., மேல் தளத்தில் நின்று கொண்டு இருந்துள்ளார். இந்த சமயத்தில்., வீட்டின் உள்ளேயிருக்கும் பீரோவானது உடைப்பது போல சத்தம் கேட்டுள்ளது. 

thief, theft,

இந்த சத்தத்தை கேட்டு சந்தேகமடைந்த சிவகுமார் வீட்டிற்குள் விரைந்ததை அடுத்து., வீட்டிற்குள் அமைதியாக புகுந்த திருடன் ஒருவன் பீரோவை உடைத்துக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து திருடனை வீட்டிற்குள் வைத்து கதவை அடைத்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் திருடனை பிடித்து நையப்புடைத்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்தததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., திருடனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore thief arrested police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->