23 வயதில் 3 திருமணம்.. 3 ஆவது திருமணத்திற்கு விலையாக பச்சிளம் குழந்தையின் உயிர்.. மறுநாளே திருமணம்... வேலூரில் கண்ணீர் சோகம்.!!
in vellore couple investigation baby murder for 3 rd marriage
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி அடுத்துள்ள கம்மவான்பேட்டை அருகேயுள்ள மொட்டை மலையில் முருகன் கோவிலானது கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் பணிகளை பார்க்க அப்பகுதி மக்கள் சென்று வரும் நிலையில்., மலையின் பாதிவழியில் உள்ள பள்ளத்தில் 2 வயது பெண் குழந்தையின் பிணமொன்று இருந்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் குழந்தையை கொலை செய்து வீசியதும்., இது நடந்து 4 நாட்கள் இருக்கலாம் என்றும் தெரியவந்தது.
மேலும்., குழந்தையின் உடலை மறைக்க பெரிய அளவிலான பாறாங்கல்லை குழந்தையின் மீது போட்டு மூடியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் ஆற்காடு பகுதியை சார்ந்த தங்கமணி என்பவர் குழந்தை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். மேலும்., குழந்தையுடைய தாயாரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மஞ்சுளாவை (வயது 23) கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னனதாக மஞ்சுளா ராஜாமணி என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்த நிலையில்., குழந்தை குறித்து கேட்டதற்கு முன்னுக்கு பின்னர் முரணாக பதிலளித்துள்ளார். மேலும்., இவரது திருமணத்திற்கு விலையாக குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மஞ்சுளா முதல் திருமணமாக அவரது தாய்மாமனை திருமணம் செய்து கொண்ட நிலையில்., தேனி மாவட்டத்தினை சார்ந்த பாண்டியன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து கணவரை பிரிந்து தாழனூரில் வசித்து வந்த நிலையில்., ஆற்காடு பகுதியை சார்ந்த வரகூர்புதூர் பகுதியை சார்ந்த ராஜாமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ராஜாமணியை திருமணம் செய்ய முடிவு செய்து இவர்களின் திருமணத்திற்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று குழந்தையை கொலை செய்து., கொலை செய்த மறுநாளே திருமணமும் நடந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியான காவல் துறையினர் மஞ்சுளா மற்றும் இராஜாமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in vellore couple investigation baby murder for 3 rd marriage