ஒரு வேலை சோறு வைத்த நன்றிக்கு இறுதிக்கட்ட பாசப்போராட்டம்.. உணவு வைத்தவருடன் விண்ணுலகம் பயணித்த துயரம்.!!
in thirunelveli man died simultaneously dog also died police investigation
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் தனியார் பேருந்து உரிமையாளர் சோமசுந்தரம். இவரது இல்லத்தில் பிரெசிலியன் மேஸ்டிஃப் (Brazilian mastiff) வகையினை சார்ந்த நாளையொன்று இருந்துள்ளது. இந்த நாய்க்கு ராபின் என்று பெயர் சூட்டி வளர்ந்து வந்தனர். இவர்களின் இல்லத்தில் கடந்த ஐந்து வருடமாக குருத்துடையார்புரம் பகுதியை சார்ந்த பன்னீர் செல்வம் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்., சோமசுந்தரத்தின் மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோயம்புத்தூரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். இதனால் சோமசுந்தரத்தின் குடும்பத்தினர் கோயம்புத்தூருக்கு சென்றுவிட்ட நிலையில்., காவலாளி பன்னீர் செல்வம் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில்., கடந்த வியாழக்கிழமையன்று காலை சுமார் 6 மணியளவில் தோட்டப்பகுதியில் பன்னீர் செல்வம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடைக்கவே., இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டு வாயிலை திறக்க முயற்சித்த நேரத்தில்., உள்ளே இருந்த நாய் ராபின் காவல் துறையினரை பார்த்து குறைத்துள்ளது.
மேலும்., இறந்துபோன பன்னீர் செல்வத்தின் உடலுக்கு அருகே நீண்ட நேரமாக நின்றுகொண்டு இருந்த நிலையில்., ராபின் யாரையும் அனுமதி செய்யவில்லை. சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் காவல் துறையினர் பிற வழியின்றி ராபினின் மீது சுருக்கு கயிற்றை போட்டு அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இந்த முயற்சியில் எதிர்பாராத விதமாக ராபினின் கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாகி உயிரிழந்தது.
பின்னர் பன்னீர் செல்வதுடைய உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து., பிரேத பரிசோதனை முடிவில் மாரடைப்பின் காரணமாக பன்னீர் செல்வம் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும்., கடந்த 4 வருடங்களாக தனக்கு அன்போடு உணவளித்து பராமரித்து வந்த பன்னீர் செல்வத்தின் உடலை நெருங்கவிடாமல் பாச போராட்டம் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirunelveli man died simultaneously dog also died police investigation