முக்கிய நிர்வாகி அதிமுக கட்சியில் இருந்து நீக்கம்..EPS அதிரடி!
Key administrator removed from AIADMK party EPS in shock
கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால்,தூத்துக்குடி அதிமுக பகுதி செயலாளர் எஸ்.பி.எஸ். ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆல் தொடங்கப்பட்ட அதிமுக அதன் பின்னர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் வழிநடத்தி செல்லப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவியேற்று முதல் இன்று வரை கட்சிகட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களை அதிமுகவிலிருந்து நீக்கி வருகிறார். இதற்கு முன் அதிமுக ஜெயலலிதா காலத்தில் எப்படி இருந்ததோ அதேபோல் அதிமுகவை வழிநடத்தி கொண்டு செல்வதாக உறுதியாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி நிர்வாகி ஒருவரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தூத்துக்குடி தெற்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால்,
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி.எஸ். ராஜா, தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் எஸ்.பி.எஸ். ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர். ரூ.17 கோடி மோசடி வழக்கு தொடர்பாக அவர் மலேசியா தப்பி செல்ல முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Key administrator removed from AIADMK party EPS in shock