இந்திய கடற்படையில் இணைந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்..!
The first indigenously built anti-submarine ship to join the Indian Navy
இந்தியாவிலேயே முதல் முறையாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அர்னாலா என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய கடற்படை தளபதி அனில் சவுஹான் இந்த கப்பலை கடற்படையிடம் ஒப்படைத்தார்.
இந்திய கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக உள்நாட்டில் கட்டப்பட்டு வரும் நீர்மூழ்கி போர்க் கப்பல்களில் முதலாவதாக இந்த கப்பல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் ஒத்துழைப்பின் கீழ் கொல்கட்டாவைச் சேர்ந்த Garden Reach Shipbuilders and Engineers (GRSE) என்ற நிறுவனம் இந்த கப்பலை காட்டியுள்ளது. கடந்த மே மாதம் 08ஆம் தேதி தமிழகத்தின் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த கப்பல் நீருக்கு அடியில் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு மற்றும் தீவிர கடல் சார்நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கப்பல் கடற்படையில் இணைவதன் மூலம், கடலோர பகுதிகளில் நீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான இந்திய கடற்படையின் பலம் வலிமை பெறும் என்றும், தன்னிறைவு இந்தியா என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் எனக் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் அர்னாலா என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் சிறப்பம்சங்கள்..
- 77 மீ.,நீளம் கொண்டது.
- அதிநவீன நீருக்கு அடியிலான கண்காணிப்பு அமைப்புகள். ஆழமற்ற நீரில் செயல்படும் வகையில் வடிவமைப்பு.
- டீசல் இன்ஜின் மற்றும் வாட்டர்ஜெட் சேர்ந்து இயக்கப்படும் மிகப்பெரிய இந்திய கடற்படை போர்க்கப்பல் இதுவாகும்.
- மஹாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரில் உள்ள பாரம்பரியமிக்க அர்னாலா கோட்டையை நினைவு கூறும் வகையில் இந்த கப்பலுக்கு ஐஎன்எஸ் அர்னாலா எனபெயர் சூட்டப்பட்டுள்ளது.
English Summary
The first indigenously built anti-submarine ship to join the Indian Navy