15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முறை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


வாக்காளர்களின் வசதியை மேம்படுத்தவும், விரைவாக வழங்கும் ஒரு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஸ்ரீ ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோரால் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களில், புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற வசதியாக புதிய முறை அறிமுகம் செய்துள்ளது.  இது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது:

வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர் புகைப்பட அட்டைகளை வழங்க முடியும் என்றும், இதில் ஒரு வாக்காளர் புதிதாகவோ அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர்களின் விவரங்களில் ஏதேனும் மாற்றம் சேர்த்தல் நீக்குதல் ஆகியவை இதில் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கும், தங்கள் விவரங்களைப் புதுப்பிக்கும் ஏற்கனவே உள்ள வாக்காளர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையில், வாக்காளர் பதிவு அதிகாரியால் அஞ்சல் துறை மூலம் வாக்காளருக்கு அட்டை வழங்கப்படும் வரை, ஒவ்வொரு கட்டத்தையும் நிகழ்நேரக் கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில், வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New voter ID card issuance system introduced within 15 days


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->