குழந்தைகளுக்கு பிடித்த சக்கரை வள்ளிக் கிழங்கு அடை எப்படி செய்வது...? பாக்கலாமா...! - Seithipunal
Seithipunal


சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை
தேவையான பொருட்கள் :
பொருள்                             - அளவு
சர்க்கரைவள்ளிக் 
கிழங்கு                             கால் கிலோ
புழுங்கல் அரிசி                   1 கப்
ரவை                                      அரை கப்
மைதா மாவு                               அரை கப்
வெல்லம்                                கால் கிலோ
ஏலக்காய்                                   3 (பொடியாக்கியது)
நெய்                                     4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல்                  1 கப்


செய்முறை :
முதலில்,அரிசியை 5மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி அரிசியுடன் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.வெல்லத்தைத் தூளாக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றி கரையவிடவும்.

அத்துடன் பொடித்த ஏலக்காய் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.அரைத்து வைத்துள்ள அரிசி கிழங்கு கலவையில் ரவை, மைதா மாவு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இறுதியாக வெல்லக் கரைசலையும் ஊற்றி நன்கு கலந்து அடை மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கலந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறு அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு குறைந்த தணலில் இருபக்கமும் வேகவிட்டு எடுக்கவும். இப்போது சுவையான நெய் மணக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை ரெடி.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How to make a sweet potato casserole that kids love


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->