ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் முயற்சி: கோவை அரபிக் கல்லூரி முதல்வர் மற்றும் ஊழியர் கைது..! என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த குற்றச்சாட்டில் கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்பட 02 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரபிக் கல்லூரியில் அரபி மொழி கற்பித்து தருவதாகக் கூறி பயங்கரவாத சித்தாத்தங்கள் ரகசியமாக போதிக்கப்பட்டு வருவதாகவும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே என்.ஐ.ஏ., வழக்குப்பதிவு செய்திருந்தது.

அத்துடன், கடந்த 2022-ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களும் கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்பதும் என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, கோவை அரபிக் கல்லூரியின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆள்சேர்த்த, அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அலி, அந்தக் கல்லூரியின் ஊழியர் ஜவஹர் சாதிக் ஆகிய இருவரை  என்.ஐ.ஏ., இன்று கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore Arabic College Principal and staff arrested for trying to recruit people for ISIS terrorist organization


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->