ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் கண்ணீர் மல்க மனைவி அஞ்சலி...!
Helicopter accident Wife Anjali in tears in military uniform pays tribute
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று டேராடூனிலிருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 6 பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த நிலையில், உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் உடலுக்கு அவரது மனைவி, ராணுவ சீருடையில் கண்ணீர் மல்க இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.இந்தக் காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது.
மேலும், இறுதி ஊர்வலத்தில் ராஜ்வீர் சிங்கின் புகைப்படத்தை அவரது கையில் பிடித்தபடியே அழுதுகி கொண்டு நடந்து வந்தார்.இதில் ராஜஸ்தான் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.இதில் குறிப்பாக, கர்னல் ராஜ்வீர் சவுகான் 14 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்த பிறகு ஓய்வு பெற்றார்.
கடைசியாக அவர் பதான்கோட்டிலுள்ள ராணுவ விமானப் படையில் லெப்டினன்ட் கர்னல் பதவியிலிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்ற பிறகு, லெப்டினன்ட் கர்னல் ஆர்யன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சிவில் ஹெலிகாப்டர் விமானியாக சேர்ந்தார்.இதில் ராஜ்வீர் சவுகான் 2011 இல் தீபிகாவை திருமணம் செய்தார்.
இதில் சிறப்புடையதாக 'தீபிகா சவுகான்' அவர்களும், ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். இந்த 14 வருட திருமணத்திற்குப் பிறகு, இந்த தம்பதிக்கு 4 மாதங்களுக்கு முன்பு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது என்பது வருத்தமளிக்கிறது.
English Summary
Helicopter accident Wife Anjali in tears in military uniform pays tribute