யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது!
5 people arrested for hiding elephant tusks
குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்,மேலும் அவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட வனச்சரக அலுவலர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே மர்ம நபர்கள் யானை தந்தத்தை பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட வனச்சரக அலுவலர் சுப்பையா, வனசரகர் அருள்நாதன் மற்றும் வனவர் ரவுக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத், முத்துகுமார் ,சாகிம் அகமது, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அபிஜில்லா, வேலூரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அவர்களிடம் யானை தந்தம் ஒன்றரை கிலோ இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் சுப்பையா5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். திருவள்ளூர் அருகே யானை தந்தம் பதுக்கி வைத்திருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
5 people arrested for hiding elephant tusks